ஐதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற போக்குவரத்து சேவை அமைப்பாக உள்ளது. 57 நிறுத்தங்களை உள்ளடக்கிய 3 வழித்தடங்களில் ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 5 லட்சம் பேர் ஹைதராபாத் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர்.
இந்த நிலையில் பயணிகள் அதிலும் குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ஐதராபாத் மெட்ரோ 20 திருநங்கைகளை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து பாதுகாப்பு பணியில் இணைத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம், திருநங்கைகளுக்கு சமூக அதிகாரமளித்தல் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பயணிகள் பாதுகாப்பும் மேம்படும் என்று ஐதராபாத் மெட்ரோ தெரிவித்துள்ளது.