அம்­பத்­தூர் தொழில்­பேட்டை பேருந்து நிலை­யம் அதி­ந­வீன வச­தி­க­ளு­டன் ரூ11.81 கோடி மதிப்­பீட்­டில் கட்டி முடிக்­கப்­பட்­டுள்­ளது. இன்று இதனை துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பங்­கேற்று மக்­கள் பயன்­பாட்­டிற்கு திறந்து வைத்­தார்.

அம்­பத்­தூர் தொழிற்­பேட்டை பேருந்து நிலை­யம் சுமார் 40 ஆண்­டு­க­ளுக்கு முன்பு உருவாக்­கப்­பட்­டது. இங்கு பல ஆண்­டு­க­ளாக அடிப்­படை வசதி இன்றி பேருந்­து­ப­ய­ணி­கள் அவ­திப்­பட்டு வந்­த­னர். இந்­தப் பேருந்து நிலை­யத்தை தரம் உயர்த்த கோரி அம்­பத்­தூர் எம். எல் .ஏ. ஜோசப் சாமு­வேல், தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா லின், துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின், இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு ஆகி­யோ­ரின் கவனத்­திற்கு கொண்டு சென்­றார்.

இதை­ய­டுத்து சென்னை பெரு­ந­கர வளர்ச்சி குழு­மம் சார்­பில் ரூ.11.81 கோடி மதிப்பிட்டில்­அம்­பத்­தூர் தொழிற்­பேட்டை பேருந்து நிலை­யத்தை மேம்­ப­டுத்த நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது. இதன் பிறகு அங்கு 11 கடை­கள், தாய்­மார்­கள் பாலூட்­டும் அறை, கழிப்­பறை வச­தி­கள்,பல்­பொ­ருள் அங்­கா­டிங்­கள், உண­வ­ருந்­தும் கூடம், போக்­கு­வ­ரத்து தொழி­லா­ளர் ஓய்வு அறை­கள், ஏடி­எம் வசதி உள்­ளிட்ட பல்­வேறு வச­தி­க­ளு­டன் சுமார் 26, 346 சதுரடியில் தரைத்­த­ளம் மற்­றும் 2 தளங்­க­ளு­டன் பேருந்து நிலை­யம் கட்டி முடிக்­கப்­பட்­டது.

இந்த பேருந்து நிலை­யத்தை நேற்று காலை தமி­ழ­க­துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் பங்­கேற்று மக்­கள் பயன்­பாட்­டிற்கு திறந்து வைத்து பார்­வை­யிட்­டார். இந்த விழா­வில் அமைச்­சர் பி.கே.சேகர் பாபு,சென்னை மேயர் பிரியா அம்­பத்­தூர்­சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் சாமு­வேல், திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ. தாய­கம் கவி, வீட்டு வசதி துறை கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் காக்­கர் லா உஷா, போக்­கு­வ­ரத்து துறை செய­லா­ளர் சிரு,சென்னை பெரு­ந­கர வளர்ச்சி குழும உறுப்­பி­னர் செய­லர் பிர­காஷ்,முதன்மை செயல் அலு­வ­லர் சிவஞா­னம், மாந­கர போக்­கு­வ­ரத்து துறை இயக்­கு­னர் பிர­பு­சங்­கர்,வட்­டார துணை ஆணையர் கவு­ஷிக் மற்­றும் 7–வது மண்­டல குழுத்­த­லை­வர் பி.கே.மூர்த்தி, திமுக பகு­திச் செய­லா­ளர்­கள் எம்.டி.ஆர்.நாக­ராஜ், டி.எஸ்.பி.ராஜ­கோ­பால் மற்­றும்­பல்­வேறு துறைகளைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் கலந்து கொண்­ட­னர்.