முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமாரின் அவதூறுப் பேச்சுகளுக்கு திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.அறிவு ஜீவி அமைச்சர்!
மிசாவை பத்தி பேசுறதுக்கு என்ன தகுதி முதலமைச்சர் விஜய்க்கு இருக்கு. ஒரு உடல் மொழி வேற காட்டுறார். அந்த மிசாவில போய் கைது பண்றது என்னமோ பல வழக்குகளை போய் கைது பண்ணுவாங்க அப்படின்னு சொல்லிட்டு இன்னைக்கு ஒரு அறிவு ஜீவி சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசுறார். மிசானா என்ன தெரியுமா.? மெயின்டனன்ஸ் ஆப் இன்டர்னல் செக்யூரிட்டி ஆக்ட் உள்நாட்டினுடைய பாதுகாப்பை உறுதி செய்ய போடப்பட்ட ஒரு ஒரு சட்டம் அது. இந்திரா காந்தி அம்மையார் எமர்ஜென்சி டிக்ளேர் பண்ணும்போது மிசாவில் எல்லா அரசியல் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். அதை எவ்வளவு கொச்சையா பேசுற.? அப்ப எப்படி இருக்கு உங்களுடைய புத்தி?
“பெண்கள் குற்றங்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்கிறார்கள், dacoity–ல் ஈடுபட்டார்கள், robbery–ல் ஈடுபட்டார்கள்” என்று சொல்கிறீர்களே. MISA–வில் யாரைக் கைது பண்ண முடியும்?
Defence of India–விற்கு, இந்தியாவுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தக்கூடிய வகையில் இருந்தால் கைது செய்யப்படுவார்கள். உள்நாட்டினுடைய கலவரங்களை ஏற்படுத்துவது, law and order–ஐ சீர்குலைப்பது அல்லது law and order–க்கு குந்தகம் விளைவிப்பது போன்ற காரணங்களுக்காக கைது செய்வார்கள்.
Essential Commodities–ஐ பதுக்கி வைத்திருந்தால் கைது செய்வார்கள். Internal Disturbance–க்காக கைது செய்வார்கள். Public Disorder–க்காக கைது செய்வார்கள். இப்படிப்பட்ட கைதுகளுக்குத்தான் MISA இருக்கிறதே தவிர, நீங்கள் சொல்கிற மாதிரி, நிர்மல் குமார் சொல்கிற மாதிரி பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குக்கோ, வழிப்பறிக் கொள்ளைக்கோ, dacoity–க்கோ அல்ல.
மிசாவிக்கு அர்த்தம் தெரியாத அமைச்சர்!
சட்டமன்றத்துல ஒரு சட்ட அமைச்சர் இருக்கிறது கேவலம் என தெரிவித்துள்ளார்.