மானாமதுரை: ​மா​னாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிஷன் மரணத்​தில் காவல் ஆய்​வாளர் உள்பட 6 போலீ​ஸார் மீது கொலை வழக்​குப் பதிந்​துள்​ள​தாக சிபிசிஐடி குற்​றப்​பத்​திரி​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கிருஷ்ண ராஜபுரத்​தைச் சேர்ந்​தவர் ஆகாஷ் டெலிஷன். கடந்த மார்ச் 5-ம் தேதி இரவு மானாமதுரை சீயோன் நகரில் ஏற்​பட்ட தகராறில் இரு​வரை வெட்​டிய வழக்​கில் ஆகாஷ் டெலிஷனை போலீ​ஸார் கைது செய்​தனர். அப்​போது காயமடைந்த அவரை மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு அவர் உயி​ரிழந்​தார். போலீ​ஸார் தாக்​கிய​தில்​தான் உயி​ரிழந்​தாகக் கூறி அவரது உறவினர்​கள் தொடர்ந்து போராட்​டம் நடத்​தினர். மேலும், பிரேதப் பரிசோதனை​யில் 28 இடங்​களில் காயங்​கள் இருப்​பதும் தெரிய​வந்​தது. காவல் ஆய்​வாளர் திலீபன் உள்பட 6 போலீ​ஸார் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். தொடர்ந்​து, சிபிசிஐடி போலீ​ஸார் கொலை மற்​றும் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தில் வழக்கு பதிந்து விசா​ரித்து வந்​தனர். ஆனால், குற்​ற​வாளி​கள் குறித்த விவரம் தெரி​யாமல் இருந்​தது.

இந்​நிலை​யில், இந்த வழக்​கில் காவல் ஆய்வாளர் திலீபன், சார்பு ஆய்​வாளர் குகன், காவலர்​கள் மகேந்​திரன், காளீஸ்​வரன், தெய்​வேந்​திரன், பழனியப்​பன் ஆகிய 6 பேர் குற்​றம்சாட்​டப்​பட்​ட​வர்​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்டு 68 நாட்​களுக்​குப் பிறகு நகல் வழங்​கிய​தாக​வும், அதி​லும் 12 பக்​கங்​கள் மட்​டுமே இருப்​ப​தாக​வும், விசா​ரணை​யின்​போது பதிவு செய்​யப்​பட்ட அனைத்து ஆவணங்​களும் முழு​மை​யாக வழங்​க​வில்லை என்​றும் ஆகாஷ் டெலிஷன் குடும்​பத்​தினர் குற்​றம்​சாட்​டினர்.