புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு எண் 10-ல் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதாகப் பொதுமக்கள் புகார் அளித்தனர். இது குறித்து அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாகத் துறை சார்ந்த அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பழுதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இன்று சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் இடத்திற்கு நேரில் சென்ற எம்.எல்.ஏ, பணிகளின் தரத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் பால்ராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.