த கேரளா ஸ்டோரி -2 படத்​தின் டீஸர் மற்​றும் டிரெய்லருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தர​விட்​டுள்​ளது.

த கேரளா ஸ்டோரி 2, கோஸ் பியாண்ட் என்ற படத்தை கமக்யா நாராயண் சிங் இயக்கி உள்​ளார். இன்று வெளி​யாக இருக்​கும் இப்​படத்​தில் உல்கா குப்​தா, அதிதி பாடி​யா, ஐஸ்​வர்யா ஓஜா முதன்மை வேடங்​களில் நடித்​துள்​ளனர். இப்​படத்​தின் டிரெய்​லர் சமீபத்​தில் வெளி​யானது. அதில் சில பெண்​கள் சேர்ந்து இளம்​பெண் ஒரு​வரைக் கட்டாயப்படுத்தி மாட்​டிறைச்சி சாப்​பிட வைப்பது போன்ற காட்​சிகள் இடம் பெற்​றிருந்​தன. இதற்​குக் கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்​நிலை​யில் கேரளா​வுக்கு அவதூறு ஏற்​படுத்​தும் உருவாக்​கப்​பட்​டுள்ள இப்​படத்​துக்​குத் தடை விதிக்க கோரி கண்​ணூரைச் சேர்ந்த தேவ் நம்​பூ​திரி என்​பவர் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனு நீதிபதி பெச்சு குரியன் முன்​னிலை​யில் விசாரணைக்கு வந்​தது. அப்​போது நீதிபதி கூறும்​ போது, மத்திய அரசு வகுத்​துள்ள விதி​முறை​களின்​படி படம் எடுக்கப்பட்டுள்ளதா? என்​பதை பரிசோ​திப்​ப​தற்​காக படத்தைப் பார்க்​கத் தீர்​மானித்​துள்​ளேன். அனைத்து மதத்தினரும் ஒற்​றுமை​யாக வாழும் கேரளா​வின் நற்பெயருக்கு களங்​கம் ஏற்​படும் வகை​யில் இருப்​பதாக மனு​தா​ரர் அஞ்​சுவ​தால் இப்​படத்​தின் டீஸர் மற்றும் டிரெய்லருக்கு தடை விதிக்​கப்​படு​கிறது என்​றார்.