டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் பங்கேற்​ப​தற்​காக பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி வரும் 2-ம் தேதி அதி​காலை இலங்​கைக்கு புறப்பட உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. மேலும் உலகக் கோப்பை தொடரையோ அல்​லது இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஆட்டத்தையோ பாகிஸ்​தான் அணி புறக்​கணிப்​ப​தற்கு வாய்ப்பு இல்லை எனவும் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரியத்துக்கு நெருக்​க​மான வட்​டாரங்​கள் தெரிவித்துள்ளன.

ஐசிசி டி 20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ர​வரி 7-ம் தேதி இந்​தி​யா, இலங்கையில் தொடங்குகிறது. இதில் 20 அணி​கள் கலந்து கொள்கின்றன. இந்​தத் தொடரில் பாகிஸ்​தான் அணி ஏ பிரி​வில் இடம் பெறுள்​ளது. இதே பிரி​வில் போட்டியை நடத்​தும் நடப்பு சாம்​பி​யனான இந்​தி​யா, நமீபியா, நெதர்​லாந்​து, அமெரிக்கா ஆகிய அணி​களும் இடம் பெற்றுள்ளன.

இந்​நிலை​யில் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரிய அதி​காரி ஒரு​வர் கூறும் ​போது, பிப்​ர​வரி 2-ம் தேதி அதி​காலை​யில் உலகக் கோப்பை அணி கொழும்​புக்​குப் புறப்படுவதற்கான பயண ஏற்​பாடு​களை பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரியம் ஏற்​க​னவே செய்​துள்​ளது. பாகிஸ்​தான் அணி உலகக் கோப்பை தொடர் முழுவதையும் இலங்​கை​யில்​தான் விளை​யாடு​கிறது. எங்கள் அணி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​றால் அந்த ஆட்​ட​மும் இலங்​கை​யில்​தான் நடை​பெறும். எனவே எந்த அடிப்​படை​யில் முழு தொடரையோ அல்​லது இந்​தி​யா​வுக்கு எதி​ரான போட்​டியையோ புறக்​கணிக்க முடியும்?

விளை​யாட்​டில் அரசி​யல் கலக்​கக்​கூ​டாது என்று பாகிஸ்தான் அரசாங்​கம் எப்​போதும் கூறி வரும் நிலையில், இந்​தி​யா​வுக்கு எதி​ரான போட்​டியைப் புறக்​கணிப்​பதை பாகிஸ்​தான் எவ்​வாறு நியாயப்​படுத்​தும்? என்​றார். பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரிய அதி​காரி​யின் இந்தத் தகவலால் அந்த அணி டி 20 உலகக் கோப்​பையையோ அல்​லது இந்​திய அணிக்கு எதி​ரான ஆட்டத்தையோ புறக்கணிக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்​படு​கிறது.