ஜன சேனா கட்சியின்நிறுவன தலைவரும் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் 55வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மதுரை மாவட்ட பொறுப்பாளர் ராம்குமார் தலைமையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஜனசேனா கட்சி இளைஞர் அணி நிர்வாகிகள் ராம்குமார், மணி ,ஸ்டீபன் காளிதாஸ், சுந்தர் மற்றும் பல்வேறு இளைஞர்கள் ரத்ததானம் அளித்தனர். முகாமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட பொறுப்பாளர் ராம்குமார் பேசியதாவது ஜனசேனக் கட்சிக்கு தமிழகத்திலும் பல்வேறு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருகின்றது தமிழன் மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி மாற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்க ஜனசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பவன் கல்யாண் பிறந்த நாளில் உறுதியேற்றுள்ளோம். மேலும் இந்த ரத்ததான முகாமை சிறப்பாக நடத்திட அனுமதி அளித்தஅரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கும், ரத்த வங்கி துறை தலைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் பவன் கல்யாண் பூர்ண நலமுடன் வாழ சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
ஜன சேனா கட்சியின்நிறுவன தலைவரும் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் 55வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் மதுரை மாவட்ட பொறுப்பாளர் ராம்குமார் தலைமையில் மாபெரும் ரத்ததான முகாம்
September 02, 2026
தமிழகம்
பொழுதுபோக்கு
Latest Posts
விமான நிலையம் தனியார்மயம் ஆரோக்கியமானது அல்ல, முதல்வர் விஜய் கடிதத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் முரண்
தமிழகம்
September 19, 2026
மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
தமிழகம்
September 19, 2026
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கியது அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது
தமிழகம்
September 19, 2026
மதுரையில் பயங்கரம்: போலீஸ் நிலையம் அருகே ஓட ஓட விரட்டி கொலை- கும்பல் வெறிச்செயல்
தமிழகம்