சவுதி அரேபியாவில் இருக்கும் உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அராம்கோ மீது ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் மீது கடந்த 28-ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் ஆட்சியாளர் கமேனி உள்ளிட்ட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் கோபமடைந்த ஈரான், அதிபர் டிரம்ப் பேச்சுக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தும், அதனை ஏற்க மறுத்தது. மேலும் 3-வது நாளாக மேற்காசிய நாடுகளில் தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் இருக்கும் உலகின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான அராம்கோவில் உள்ள ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக செயல்பட்டதால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அராம்கோ ஆலை மூடப்பட்டது.