மும்பை: அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை 50 % அதிகரிக்கப்பட்டால் மட்டுமே தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பது குறித்து தங்கள் கட்சி பரிசீலிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே கூறினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்க உள்ளது. இக்​கூட்டத்தொடரில் மக்களவை தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்படலாம் என கருதப்படுகிறது. இந்​நிலையில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் செயல் தலைவரும் பாராமதி தொகுதி எம்​.பி.யுமான சுப்ரியா சுலே மும்பை​யில் செய்தியாளர்​களிடம் கூறியதாவது: அனைத்து மாநிலங்களுக்கும் சமமான விகிதத்​தில் மக்களவை இடங்கள் 50 % அதிகரிக்கப்படுவதை உறுதி செய்தால் மட்​டுமே, தொகுதி மறு​வரையறை மசோதாவை ஆதரிப்பது குறித்து எங்கள் கட்சி பரிசீலிக்​கும். மத்திய அமைச்​சர்​கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு ஆகியோருடனான சந்திப்பின்​போது, இந்த சட்​டம் குறித்து எங்​கள் கட்சியின் ஆட்சேபனைகளை தெரிவித்தோம். தொகுதிகளின் எல்லைகளை மறு​வரையறை செய்யும் ​போது அரசு கையாளக்​கூடிய சூத்திரம் குறித்து எங்களுக்கு கவலைகள் உள்​ளன. இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.