புதுடில்லி: நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் கோரி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி (சிஜேபி) கடந்த ஜூன் 28-ம் தேதி டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டத்​தைத் தொடங்​கியது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நாடாளு​மன்​றம் நோக்கி சிஜேபி கட்​சி​யினர், ஆதர​வாளர்​கள் பேரணி சென்​றனர். அப்​போது, போராட்​டக்​காரர்​கள் - போலீ​ஸார் இடையே தள்​ளு முள்ளு ஏற்​பட்​டது. போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும், கண்​ணீர் புகை குண்​டு​கள் வீசி​யும் கூட்​டத்​தைக் கலைத்​தனர். போராட்டக்காரர்களும் போலீஸார், துணை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கினர். போலீஸ் வாகனங்களைக் கவிழ்த்து சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெண்கள் மீது போலீசார் அநாகரிகமாக நடந்து கொண்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பேரணியின் போது, பெண் பங்கேற்பாளர்கள் மற்றும் மாணவிகள் மீது ஆண் காவலர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், சிலர் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரின் பின்புறத்தில் ஆண் காவலர் ஒருவர் லத்தியால் அடிக்கும் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.