சென்னை: சமூக விரோ​தி​களின் கூடார​மாகமாறி வரும் கோயம்​பேடு பேருந்து நிலை​யத்தை புனரமைத்து மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர வேண்​டும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநகரில் போக்​கு​வரத்து நெரிசலுக்கு தீர்​வு​காண கோயம்​பேட்​டில் ரூ.103 கோடி​யில் ஆசி​யா​விலேயே மிக பிரம்​மாண்​ட​மான பேருந்து நிலை​யம் அமைக்​கப்​பட்டு 2002-ம் ஆண்டு அதி​முக அரசால் திறக்​கப்​பட்​டது. கோயம்​பேட்​டிலும் போக்​கு​வரத்து மற்​றும் மக்​கள் நெரிசல் அதி​க​மானதைத் தொடர்ந்​து, செங்​கல்​பட்டு மாவட்​டம், கிளாம்​பாக்​கத்​தில் பிரம்​மாண்​ட​மான புறநகர் பேருந்து நிலை​யம் அமைக்​கப்​பட்​டு, 2019-ம் ஆண்டு அடிக்​கல் நாட்டி பேருந்து நிலை​யப் பணி​களை தொடங்கி வைத்​தேன்.

இந்நிலையில், திமுக அரசின் அலட்​சி​யத்​தால், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகம் கேட்​பாரற்று சமூக விரோ​தி​களின் கூடார​மாக மாறி​யுள்​ளது. தற்​போது கோயம்​பேடு பேருந்து வளாகம் முழு​வதும் இரவு நேரங்​களில் பல்​வேறு சமூக விரோதச் செயல்​கள் நடை​பெறு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன. சாலைகள் மோச​மான​தாக​வும், உரிய மின் விளக்​கு​கள் இல்​லாமல் கோயம்​பேடு பேருந்து வளாகத்​தின் உட்​புறம் காணப்​படு​கிறது. தற்​போது புதிய அரசு அமைந்த பின்​னரும், கோயம்​பேடு பேருந்து நிலைய வளாகத்​தில் நடை​பெறும் சட்​ட​விரோதச் செயல்​களை கட்​டுப்​படுத்த காவல் துறை​யினர் எந்​த​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​தைப் போர்க்​கால அடிப்​படை​யில் புனரமைத்​து, ஜெயலலிதா ஆட்​சி​யில் திட்​ட​மிட்​டது​போல், மேற்கு மற்​றும் வட மாவட்​டங்​களுக்​குச் செல்​லும் பேருந்​துகளை​யும், நகரப் பேருந்​துகளை​யும் கோயம்​பேடு பேருந்து நிலை​யத்​திலிருந்து இயக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.