சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதல்வர் வாயை திறப்பது எப்போது..? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது சாரி சொன்னால் போதுமா என என்னை பார்த்து கேட்டவர் முதலமைச்சரானதும் அதைக் கூட செய்ய துணிவின்றி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்..? என அவர் விமர்சித்துள்ளார்Geographic Reference
இது தொடர்பான சமூக வலைதள பதிவில்; தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “சாரி சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? அக்கவுண்டபிலிட்டி, அபாலஜி முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.