அடுத்த மாதம் 7-ம் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியா செல்ல மாட்டோம் என்று அறிவித்து இருக்கும் வங்காளதேசம், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்து மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று பிடிவாதம் காட்டி வருகிறது.

இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தையில் முடிவு கிடைக்காததால் இன்றைக்குள்(நேற்று) இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று வங்கதேசத்துக்கு கெடு விதித்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியா வந்து விளையாட மறுத்தால் வங்கதேசத்துக்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் இருக்கும் அணியை சேர்க்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விருப்பத்திற்கு ஏற்ப சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதித்துள்ள எந்தவொரு நிபந்தனைக்கும் வங்கதேசம் அடிபணியாது என்று தெரிவித்தார்.