தஞ்சை கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் அவ­தூ­றாக பேசி­ய­தாக வழக்­குப் பதிவு செய்து, நீதி­பதி அறி­வு­றுத்­த­லை­யும் மீறி உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை கைது செய்­துள்­ளது. அர­சின் இந்த அரா­ஜ­கப் போக்கை கண்­டித்து தமிழ்­நாடு முழு­வ­தும் கழ­கத்­­தினர் கொந்­த­ளித்து ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­ பட்­டு இலட்சக்கணக்கில் கைதா­கி­யுள்­ள­னர்.


புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் களம் கண்ட எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்.


மேலும் அவர், இன்று பகல் 12 மணி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், அதையும் மீறி தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.


பொதுவாழ்வில் இருப்பவர், அதுவும் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுபவர், மக்களின் பிரச்சினைகளுக்காக ஆளும் அரசிடம் கேள்வி எழுப்பினால் கைது செய்வதுதான் இந்த ஆட்சியின் ஜனநாயகமா?


மக்களுக்காக குரல் கொடுப்பதை கைது, அடக்குமுறை, அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கைகளால் ஒருபோதும் தடுக்க முடியாது.


மிசா கொடுமைகளையே எதிர்கொண்டு ஜனநாயகத்திற்காக போராடி வளர்ந்த இயக்கத்தின் வாரிசுகள் நாங்கள். உங்கள் கைது நடவடிக்கைகளும், அடக்குமுறைகளும் எங்களை ஒருபோதும் அடிபணியச் செய்யாது.


மக்களின் உரிமைகளுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போம்.


அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கைதை கண்டித்து புதுக்கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு, கைது செய்யப்பட்டுள்ளோம்.


ஆளும் த.வெ.க. அரசின் காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.