நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணிகள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் வதோத​ரா​வில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்திய அணி 4 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. தொடர்ந்து ராஜ்கோட்​டில் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்​தது.

இதனால் தொடர் 1-1 என சமநிலை​யில் உள்​ளது. இந்நிலையில் ஒரு​நாள் போட்​டித் தொடரை வெல்​வது யார்? என்பதை தீர்​மானிக்​கும் வகை​யில் அமைந்​துள்ள கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்​கர் மைதானத்​தில் இன்று (18-ம் தேதி) நடை​பெறுகிறது. இந்த போட்​டி​யில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்​களும் இந்தூர் வந்​தடைந்​துள்ளனர். இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி வீரர்​கள் ஹோல்​கர் மைதானத்​தில் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்டு வருகின்றனர். கடைசி ஒரு​நாள் போட்டி​யில் இந்​திய அணி தனது பந்​து​வீச்சு வியூ​கங்​களை மாற்றி அமைக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளது. கடைசி போட்டி நடை​பெறும் இந்தூர் ஹோல்​கர் மைதானத்​தின் எல்​லைக்​கோடு​கள் சிறிய​வை. மேலும் ஆடு​களம் பேட்​டிங்​கிற்கு சாதக​மாக இருக்​கும். இதனால் இந்​திய அணி பந்​து​வீச்சு திட்​டங்​களில் சில மாறு​தல்​களை மேற்​கொள்​ளக்​கூடும். பந்​துகளின் நீளத்தை கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்​டும். சுழற்பந்து வீச்சை பலப்​படுத்​தும் வகை​யில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக ஆயுஷ் பதோனி அறி​முக வீர​ராக களமிறக்​கப்​பட ​வாய்​ப்​புகள்​ உள்​ளன.