வாஷிங்டன்: ரஷ்ய எண்​ணெயை வாங்​கும் இந்​தி​யா, சீனா மீது 100% கூடு​தல் வரி விதிக்க கோரும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபை​யின் நடை​முறை வாக்​கெடுப்​பில் நடை​முறை​சார் வாக்​கெடுப்பு முறை​யில் நிறைவேறியுள்ளது.

இந்த மசோதா தற்​போது இந்​தி​யா​வுக்​கும், சீனா​வுக்​கும் மிகப்​பெரிய சிக்​கலை ஏற்​படுத்தி உள்​ள​தாக பொருளா​தார நிபுணர்கள் தெரி​வித்​துள்​ளனர். இருப்​பினும் இந்த மசோதா அமெரிக்​கா​வில் சட்​ட​மாக வேண்​டும் என்​றால் பல்​வேறு கட்டங்களை தாண்ட வேண்​டிய கட்​டா​யம் உள்​ளது. தற்​போது செனட் சபை​யில் ஒப்​புதல் வழங்​கப்​பட்​டுள்ள நிலையில், அதன்​பிறகு பிர​தி​நி​தி​கள் சபை​யில் வாக்​கெடுப்பு நடக்​கும். இந்த 2 சபைகளி​லும் பெரும்​பான்​மை​யுடன் இந்த மசோதா நிறைவேற வேண்​டும். அதன் பின்​னர்​தான் இந்த மசோதா அதிபர் டொ​னால்டு ட்ரம்​பின் ஒப்​புதலுக்கு செல்​லும். இதைத் தொடர்ந்து அவர் அனு​மதி வழங்​கும்​பட்​சத்​தில் வரி விதிப்பு தொடங்​கும்.

இந்த மசோதா நிறைவேற்​றப்​பட்​டால் இந்​தி​யா, சீனா உள்​ளிட்ட 5 நாடு​கள் கடும் பாதிப்​பைச் சந்​திக்​கும் எனத் தெரி​கிறது. ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் மற்​றும் எரி​வா​யுவை அதி​கம் இறக்குமதி செய்​யும் இந்​தி​யா, சீனா, ஸ்லோ​வாக்​கி​யா, ஹங்​கேரி, அஜர்​பைஜான் ஆகிய 5 நாடு​கள் மீது 100% வரி விதிக்க இந்த மசோதா பரிந்​துரைக்​கிறது.