ஈ​ரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​னால், அமெரிக்க படைகள், இஸ்​ரேல் மீது தாக்​குதல் நடத்​தப்​படும் என ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபப் எச்​சரித்​துள்​ளார்.

ஈரான் அணு ஆயுத தயாரிப்​பில் ஈடு​பட்​ட​தால், அந்​நாட்​டின் மீது சர்வ​தேச தடைகள் விதிக்கப்பட்டன. இதன் காரண​மாக ஈரானின் பொருளா​தா​ரம் வீழ்ச்​சி​யடைந்​தது. இதனால் ஈரான் மக்​கள் ஆட்சியாளர்​களுக்கு எதி​ராக கடந்த மாதம் 28-ம் தேதி போராட்டத்தில் குதித்​தனர். இவர்​கள் மீது ஈரான் பாது​காப்பு படையினர் தாக்குதல் நடத்​தி​ய​தில் இது​வரை 203 பேர் இறந்துள்ளனர். 2,600 பேர் காயம் அடைந்​துள்​ளனர். போன் இணைப்பு​கள் மற்​றும் இணையதள இணைப்​பு​கள் துண்டிக்கப்பட்டுள்​ளன.

இதற்கு கண்​டனம் தெரி​வித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் சுதந்​திரத்தை எதிர்நோக்கியுள்ளது. அங்கு இதுவரை இல்​லாத அளவில் போராட்​டம் நடை​பெறுகிறது. ஈரான் மக்​களுக்கு உதவ அமெரிக்கா தயா​ராக இருக்​கிறது என ஊடகத்​தில் தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில் ஈரான் மீது தாக்​குதல் நடத்த அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்​ளார். ஆனால் அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமெரிக்க இதழ்​களில் செய்தி வெளி​யானது. அமெரிக்க அரசு விடுத்​திருந்த செய்​தி​யில், அதிபர் டுரம்ப்​புடன் விளை​யாட வேண்​டாம். அவர் சொன்​னால், அதை செய்​வார் என எச்​சரிக்கை விடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பகர் காலிபப் விடுத்​துள்ள எச்​சரிக்​கை​யில், ஈரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​னால், அண்டை நாடு​களில் உள்ள அமெரிக்க படைகள் மற்​றும் இஸ்​ரேல் மீது தாக்​குதல் நடத்​து​வோம் என்​று கூறியுள்ளார்.

ஈரான் மதத் தலை​வர் அயதுல்லா அலி கமேனி விடுத்​துள்ள எச்சரிக்​கை​யில், மக்​கள் போராட்​டம் ஒடுக்​கப்​படும் என கூறியுள்ளார். ஈரான் அட்​டர்னி ஜெனரல் முகமது ஆசாத் விடுத்துள்ள எச்சரிக்கை​யில், போராட்​டத்​தில் பங்​கெடுப்​பவர்​கள் கடவுளுக்கு எதிரி​யாக கருதப்​படு​பவர். அவர்​களுக்கு மரண தண்டனை வி​திக்​கப்​படும். போ​ராட்​டத்​துக்கு உதவுபவர்​கள்​ மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்​ என கூறி​யுள்​ளார்​.