புதுடெல்லி: ராமர் கோயில் நன்கொடை கையாடல் புகார் குறித்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர்கள் அஜய் குமார் ராய், தினேஷ் குமார் ராய் உச்​ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆர்​ஜேடி எம்பி சுதாகர் சிங், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் நரேந்திர குமார் கோசு​வாமி, மதுரையைச் சேர்ந்த ஹிந்து தர்ம பரிஷத்​தின் கே.கே. ரமேஷ் சார்பிலும் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த 4 மனுக்​களும் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தன. அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பாக உத்தர பிரதேச அரசு அமைத்​துள்ள சிறப்பு விசாரணைக் குழு அதன் நிலை அறிக்​கையை சீலிட்ட உறை​யில் தாக்​கல் செய்ய வேண்​டும். மேலும் மனுக்​கள் தொடர்​பாக அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பதில் அளிக்க வேண்டும் என்​றும் உச்​ச நீ​தி​மன்​றம்​ உத்தரவிட்டுள்ளது.