தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் மூலம் அரசு சார்பாக பள்ளியிலேயே உணவு வழங்கப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் காலை உணவு திட்டமும் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் மதிய உணவுத் திட்டத்தில், மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜமோகன் தெரிவித்துள்ளார். சென்னையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜமோகன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகள் மற்றும் அது தொடர்பான குறைகள், கோரிக்கைகள் கேட்கப்பட்டன.

இந்த கூட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர் அமைப்புகள் மற்றும் பணியாளர் சங்கங்கள் கலந்துகொண்டு, தங்களின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் அமைச்சரிடம் சமர்ப்பித்தன. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜமோகன், இந்த கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளில், மதிய உணவு திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும் என கூறினார். இந்த கோரிக்கையை அரசு தீவிரமாக கவனத்தில் கொண்டு பரிசீலித்து வருகிறது என்றார்.