சென்னை: ​தி​முக​வின் பரிந்​துரைகள் சேர்க்​கப்​பட்​டிருந்​தால், நாடாளு​மன்​றத்​தில் தொகுதி மறு​வரையறை மசோ​தாவை எதிர்க்க மாட்​டோம் என்று அக்​கட்​சி​யின் அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி தெரி​வித்​தார்.

நாடாளு​மன்​றத்​தில் கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற நீட்​டிக்​கப்​பட்ட பட்​ஜெட் கூட்​டத்​தொடரின்​போது அறி​முகம் செய்​யப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தா, இண்​டியா கூட்​ட​ணியால் தோற்​கடிக்​கப்​பட்​டது. இந்த நிலை​யில் நாடாளு​மன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக.13-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இந்த கூட்​டத்​தொடரில் திருத்​தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிப்​ப​தாக கூறப்​படு​கிறது. இண்​டியா கூட்​ட​ணி​யில் இருந்து காங்​கிரஸ் வெளி​யேறி​விட்​ட​தால், தற்​போது 22 எம்​.பி.க்​கள் கொண்ட திமுக முடிவை நோக்கி பரவலாக எதிர்​பார்ப்​பு​கள் எழுந்​துள்​ளன.

இதுதொடர்​பாக திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி ஆங்​கில செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறும்​போது, “நாங்​கள் ஏற்​கெனவே ஒரு​முறை தொகுதி மறுசீரமைப்பு மசோ​தாவை முறியடித்​துள்​ளோம். மீண்​டும் மசோதா தாக்​கல் செய்​யப்​படும்​போது அதன் உள்​ளடக்​கத்தை நாங்​கள் பரிசீலிப்​போம். அது தமிழகம் உள்பட தென் மாநிலங்​களின் நலன்​களுக்கு எதி​ராக இருந்​தால், திமுக அதை எதிர்க்​கும். மாறாக, மத்​திய அரசு திமுக​வின் பரிந்​துரைகளை அதில் இணைத்​திருந்​தால், அதை எதிர்க்க வேண்​டிய அவசி​யமில்​லை. அதே​நேரம், மாநில உரிமை​களுக்​கான போராட்​டத்​தில் திமுக உறு​தி​யாக இருக்​கிறது” என்​றார்.