தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். பழைய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததால், கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. இச்சங்கத்தின் தலைவராக இருந்த கே.​பாக்யராஜ் மறைவை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இச்சங்கத்தின் தேர்தல், வரும் 19-ம் தேதி சென்னையில் நடை​பெறுகிறது. தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலைமையில் ‘திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்’ என்ற அணியும் சேரன் தலைமையில் ‘நம்ம கே.பாக்யராஜ்’ என்ற அணியும் போட்டியிடுகின்றன. இரு அணிகளும் கே.​பாக்​ய​ராஜ் பெயரிலேயே போட்டியிடுகின்​றன. பொதுச்செயலாளர் பதவிக்கு மனோஜ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் பதவிக்கு லியாகத் அலிகான், ஆர்​.சுந்தர் ராஜன், 2 பேர் கொண்ட துணைத் தலைவர் பதவிக்கு, யார் கண்ணன், சமுத்திரக்கனி, சினேகன், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 4 பேர் கொண்ட இணைச் செயலாளர் பதவிக்கு 8 பேரும் 12 பேர் கொண்ட செயற்​குழு உறுப்பினர் பதவிக்கு 24 பேரும் போட்​டி​யிடு​கின்​றனர்.