சென்னை: தமிழக காவல்துறையில், உதவி ஆய்வாளர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் உதவி ஆய்வாளர்​கள் 10 ஆண்டு பணிபுரிந்த பின்னர் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மேல் அதிகாரிகள் உதவி ஆய்வாளர்களின் பணி குறித்து அறிக்கை தயாரித்து தலைமையகத்துக்கு அனுப்புவர். அதன்​படி, பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள், காலிப் பணியிடங்களின் அடிப்படையில், உதவி ஆய்வாளர்களுக்கு, காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்​படி, 2024-25 ஆண்​டுக்​கான பதவி உயர்​வில், 57 பெண் உதவி ஆய்​வாளர்​களுக்கு ஆய்​வாளர்​களாக பதவி உயர்வு வழங்கி டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் உத்​தரவிட்டுள்ளார்.