கடந்த இரண்டு மாதங்களாக கோச்சடை மெயின் ரோடு முத்தையா கோவில் எதிரில் உள்ள பாதாள சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தொடர்ந்து சாலையில் கழிவுநீர் தேங்கி மிகப் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது வாகனங்கள் செல்வதற்கும் காலையில் பள்ளி குழந்தைகள் செல்வதற்கும் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது தொடர்ந்து மாநகராட்சி பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்தாலும் நிரந்தர தீர்வு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து விட வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள வணிகள் பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.