காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ளது. மேலும், 700-க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பியதாகவும், மற்ற 37 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் வரலாறு காணாத வகையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மலைச்சரிவுகளில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்ளநீர் கிராமங்கள், பாலங்கள் மற்றும் முக்கிய நீர்மின் திட்டங்களை அடித்துச் சென்று பேரழிவை ஏற்படுத்தியது. ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள் நொடிப் பொழுதில் வெள்ளத்தில் சரிந்து விழுந்தன. பெரும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதுதொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160-ஐ தாண்டியுள்ளது. மேலும், 700-க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பியதாகவும், மற்ற 37 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.