மது­ரை­யில் நீண்ட நாட்­க­ளுக்கு பிறகு முதல்­வர் மு.க. ஸ்டாலி­னின் மனைவி துர்கா, டி.வி.எஸ். நக­ரில் உள்ள மு.க. அழ­கிரி வீட்­டுக்கு சென்­றார். அவ­ரு­டன் உறு­வி­னர்­க­ளும் உடன் சென்­ற­னர். சுமார் ஒரு மணி நேர­மாக மு.க. அழ­கி­ரி­யின் மகன் துரை தயா­நி­தி­யின் உடல் நலன் குறித்­தும், மற்­றும் அனை­வ­ரு­டைய நலன் குறித்­தும் துர்கா ஸ்டாலின் விசாரித்தார். அதை தொடர்ந்து அவ­ருக்கு மதி­யம் விருந்து அளிக்­கப்­பட்­டது. பின்பு மு.க. அழ­கி­ரி­யின் மனைவி காந்தி அழ­கிரி மற்­றும் முதல்­வ­ரின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் மதுரை மீனாட்சி அம்­மன் கோவி­லிக்கு சென்று அங்கு அம்­மனை தரி­சித்து விட்டு சென்னை திரும்­பி­னர். முதல்­வ­ரின் மனைவி துர்கா ஸ்டாலின்,மு.க. அழ­கிரி வீட்டுக்கு சென்று குடும்ப நலன் குறித்து விசா­ரித்து சென்­றது கட்­சி­யி­ன­ரி­டையே பெரும் ஆர்­வத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மேலும் மதுரை அர­சி­யல் நில­வ­ரம் குறித்­தும், மதுரை மேயர் மண்­டல தலை­வர்­கள் நியமனம் குறித்­தும் காந்தி அழ­கிரி, துர்கா ஸ்டாலி­னி­டம் பேசி­ய­தாக கட்சி வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. அது மட்­டு­மல்­லாது, மதுரை மற்­றும் சுற்­றி­யுள்ள மாவட்­டங்­க­ளில் தேர்­தல் வெற்றி வாய்ப்­பு­கள் குறித்­தும் மீண்­டும் அழ­கி­ரியை முனைப்­பாக செயல்­ப­டு­வார் என கட்சி­யி­னர் எதிர்­பார்க்­கின்­ற­னர்.